Friday, August 25, 2006

Probability theory தவறு என்று சொல்லும் micro-psychokinesis ஆராய்ச்சிகள்

முதலில் psychokinesis என்றால் என்னவென்று சொல்லிவிடுகிறேன். ஏழு அல்லது எட்டு வருடங்களுக்கு முன் மோகன்லால் நடித்து, தமிழில் வெளிவந்த படம் அது. அசோகன் என்று நினைக்கிறேன். அதில் ஒரு சிறுவன் ஒருவன் புத்த துறவியாக நடித்திருப்பான். அவனுக்கு சில அமானுஷ்ய சக்திகள்(psychic power) உண்டு. அதாவது, சில பொருள்களை பார்வை மூலமாகவே நகர வைப்பது. அதாவது மனோசக்தியின் மூலம் பொருட்களை நகர்த்துவது அல்லது இயக்குவது. இதையே ஆங்கிலத்தில் psychokinesis என்று சொல்வார்கள். இந்த மாதிரி அமானுஷ்ய சக்தியுள்ள ஒரு லட்சம் சிறுவர்களை கண்டெடுத்து, சைனா செய்து வரும் psychic research ரொம்ப பிரபலம். அது பற்றி தனியே ஒரு இடுகையில் பேசலாம். இது மாதிரி மனோசக்தியைப் பயன்படுத்தி காசு சுண்டி விடுதலில், சீட்டு விளையாடுதலில் அல்லது தாயம் விளையாடுதலில் தான் விரும்பும் விளைவை வரவைப்பது, micro-psychokinesis என்று அழைக்கப்படுகிறது. அதிக தடவையாக தலை வரவைத்தல், அல்லது ஜோக்கர் சீட்டை வரவைத்தல் அல்லது தாயம் விழவைத்தல் போன்ற சிலவற்றை எடுத்துக்காட்டுகளாக கூறலாம்.


probability theoryபடி தலை வருவதற்கு 50 சதவீத வாய்ப்புகளும், தாயம் விழவைப்பதற்கு, 12.5 சதவித வாய்ப்புகளும் உள்ளன. ஆனால், ராடின் மற்றும் நெல்சன் 1984களில் செய்த micro-psychokinesis ஆராய்ச்சிகள், probability theory தவறாகக்கூடும் வாய்ப்புகளை முன்வைக்கின்றன. அதாவது சில மனிதர்களால், இயற்கைக்கு வினோதமாக, அதிகப்படியான முறை தாங்கள் விரும்பிய ஒன்றை, (தலை அல்லது தாயம்) விழவைக்க முடிந்ததை இவர்களின் ஆராய்ச்சிகள் வெளிக்கொண்டுவந்தன. மேலும், மனிதன் தன் மனோசக்தியால், random gamesகளில் தான் விரும்பிய விளைவுகளை ஏற்படுத்த முடியும் என்பதை இவர்களின் கண்டுபிடிப்புகள் உறுதி செய்தன. அவர்களின் முடிவுகள், Foundations of physics என்ற இயற்பியல் பத்திரிக்கையில் 'Evidence for consciousness-related anomalies in random physical systems' என்ற தலைப்பில் வெளியிடப்பட்டன.



இது ஒன்றும் ஆச்சரியமான விசயமாக எனக்குத்தெரியவில்லை. எனது 10 வயது அக்கா பெண்ணுடன், நிறைய முறை தாயம் விளையாடியிருக்கிறேன். அவள் பெரும்பாலான தடவைகள், தான் விரும்பிய எண்ணை, தாயக்கட்டையில் வரவைத்து காட்டியதுண்டு. அதனால், முடிந்த வரை அவளுடன் கூட்டு சேர்ந்து விளையாடி தாயத்தில் வெல்வதற்கு முயற்சி செய்வேன். (இது இன்னொரு விசயத்தையும், இங்கெ குறிப்பிட வைக்கிறது. அது என்னவென்றால், சீனாவின் psychic research, 9-13 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளிடம் இந்த விளையாட்டுகளில் விரும்பிய விளைவை ஏற்படுத்தும் அமானுஷ்ய சக்தி அதிகமிருப்பதாக தெரிவிக்கின்றன.)


இந்த கண்டு பிடிப்புகள், புதிதாக ஒன்றையும் சொல்லிவிடவில்லை. அதாவது, பொருட்களின் மீதான, அல்லது செயல்களைத் தொடர்ந்து வரும் விளைவுகளின் மீதான, மனோசக்தியின் தாக்கத்தினை நாம் தலைமுறை தலைமுறையாக கேள்விப்பட்டு வருகிறோம். இந்த அறிவியல் ஆராச்சிகள், இதன் இருப்பினை உண்மை என்று நிரூபித்திருக்கின்றன. ஆனால், எவ்விதம் இந்த தாக்கம் நடக்கிறது என்பது, இன்னும் புரியாத புதிராகவே இருக்கிறது.

முடிவாக, கேள்வி ஒன்றைக் கேட்காமல் விட்டு விட்டால், நீங்கள் பின்னூட்டமாக எதை எழுதுவீர்கள்? அதற்காக ஒரு கேள்வி.

இந்து மதத்தில் இருக்கிற யாகம் வளர்த்தல் என்ற ஒன்றை psychokinesis முயற்சியாக பார்க்கலாமா?

Thursday, August 17, 2006

ராம கிருஷ்ண பரமஹம்சர், ஓஷோ - Are these spiritual masters schizophrenic?

ராம கிருஷ்ண பரமஹம்சர், ஓஷோ - Are these spiritual masters schizophrenic? இந்த கேள்வியோடு நான் இன்று வந்திருப்பது, யாரின் மனதையும் சத்தியமாய் காயப்படுத்துவதற்காக அல்ல. என்னைப் பொருத்தவரை எந்த கேள்விகளும் ஆபத்தானவை அல்ல. நமது, கணித அறிவு மற்றும் கோள்கள் பற்றிய, மருந்துகள் பற்றிய, இசை, மொழி பற்றிய அறிவு 2000 வருடங்களுக்கும் மேலான பழமையானது. நாம் மிகவும் பாரம்பரியம் மிக்க, பழமையான வாழ்வியல் முறையை, கலாச்சாரத்தை கொண்டிருந்தவர்களாய் இருந்தாலும், அறிவியல் தொழில் நுட்பத்தில் நாம் பின் தள்ளப்பட்டு மேற்கத்திய நாடுகள் முன்னேறிப் போனதற்கு, நாம் கேள்வி கேட்காமல் விட்டதே முக்கியமான காரணம் என்பேன். இதனால் தானோ என்னவோ, சில நுணுக்கமான, விலை மதிக்கமுடியாத தகவல்கள் நம்மை அடையாமலேயே புதைந்து போய்விட்டன. தலைப்பு சம்பந்தப்பட்ட பத்திக்குப்போவதற்கு முன், எனது சுய வரலாறிலிருந்து ஒரு பகுதி.


எனது தாத்தாவை ஊரில் உள்ள எல்லோரும் வைத்தியர் என்றே அழைப்பார்கள். எந்த பூச்சிக்கடி என்றாலும், எலும்பு முறிவு என்றாலும், தோல் வியாதி என்றாலும் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்த எனது தாத்தாவைப் பார்க்க வருவார்கள்.அவர் கொஞ்சம் மஞ்சள், மற்றும் சில வஸ்துகள் வைத்து கட்டிவிட்டு, கொஞ்சம் வேப்பிலை ஒடித்து கட்டின் மீது வைத்து ஏதோ முனகிக்கொண்டிருப்பார் (ஓம் ... ரீம் ... மந்திரகாளி..!!!!). இது மாதிரி சில நாட்கள் செய்தவுடன், வந்தவர்களின் நோய் சரியாகி இருக்கிறது. இப்பொழுது, அவர் இறந்து பல வருடங்கள் ஆகின்றன. ஆனால், அவர் செய்த மருத்துவம் என்ன? எப்படி நோயை சரியாக்கினார் என்பது எனக்கு இன்றுவரை பிடிபடாத ஆச்சரியங்களில் ஒன்று. அதைக் கேட்டுத்தெரிந்து கொள்ளாமல் விட்டதற்கு இன்றளவும், என் வீட்டில் உள்ளவர்களை நான் வைவதுன்டு.



இப்பொழுது தலைப்பிற்கு வருவோம்.

முதலில் ராமகிருஷ்ணர் பற்றி ஒரு சிறு குறிப்பு.
ராமகிருஷ்ணர் 19 ம் நூற்றாண்டில், மேற்கு வங்காளத்தில் உள்ள கமர்புகுர் என்ற கிராமத்தில் பிறந்தார். சிறு வயதில் பள்ளிப்படிப்பில் அக்கறை இல்லாவிட்டாலும், கலைகளில் ஆர்வமுடையவராய்த் திகழ்ந்தார். பணம் சேர்ப்பதில் ஆர்வமில்லாதவறாய்த் திகழ்ந்தார். பிற்காலத்தில் கல்கத்தாவில் ஒரு காளி கோவிலில், இவர் அர்ச்சகரானார். அந்த கால கட்டங்களில், அவரிடம் கடவுள் பற்றிய நிறைய கேள்விகள் எழ ஆரம்பித்தன. தான் வணங்குவது, ஆராதனை செய்வது எல்லாம் வெறும் கற்சிலை தானா? அல்லது அதற்குள் அரூவமாய் கடவுள் என்ற சக்தி இருக்கிறதா? இது மாதிரியான கேள்விகளுக்கு விடை தெரியாமல் தடுமாறினார். வழிபாட்டின் போது பல நேரங்களில் அவர் சத்தமாக அழுதிருக்கிறார். இரவு நேரங்களில் அருகிலுள்ள காட்டிற்குச் சென்று, இரவு முழுவதும் வழிபாடு செய்திருக்கிறார். தனது கேள்விகளூக்கு விடை கிடைக்காமல் அதிருப்தியால், ஒரு நான் தன் வாழ்வினை முடித்துக்கொள்ளும் பொருட்டு, வாள் ஒன்றை எடுத்து தன் கழுத்தை வெட்டிக்கொள்ள துணிந்த போது, காளியின் உடம்பிலிருந்து ஒளி வெள்ளம் இவரை நோக்கி பாயத்தொடங்கியது. அதன் சக்தியின், வலிமை தாங்காமல், அவர் அங்கேயே மயங்கி விழுகிறார். அதன் பின்னும் காளியிடம் மதங்கள் சொல்கிற உன்னத நிலையை வேண்டி பிரார்த்தனை செய்தார். பல மத சன்னியாசிகளுடன் கருத்துப் பறிமாற்றம் செய்யும் வாய்ப்புகள் அவருக்கு அமைந்தன. அதோடு, இந்து மதத்தின் பல கடினமான சாதகங்களை, பல மாதங்கள் பயிற்சி செய்து வெற்றியும் பெற்றார். அதிகப்படியான இந்துமத சாதகத்தினால், அவரின் மன நிலை பிறழ்ந்துவிட்டதாக ஊரில் வதந்திகள் பரவ ஆரம்பித்தன. அவரது அன்னையார் உடனடியாக, இவருக்கு திருமணம் செய்து வைப்பதென்று முடிவு செய்தார். ராமகிருஷ்னரும், ஏதும் எதிர்ப்பு தெரிவிக்காமல், ஆறு வயது சாரதாவை மனைவியாக ஏற்றுக்கொண்டார். அவர், சாரதாவை காளியின் வடிவமாகவே பார்க்க ஆரம்பித்தார். அவருக்கு மற்ற சன்னியாசிகளிடம் தான் கற்ற பாடங்களை சொல்லித்தர ஆரம்பித்தார். அவர் விரைவில், கடவுளைத் தேடும் அனைவருக்கும் ஒரு வழிகாட்டியானார். அவர் தொண்டைப் புற்று நோயால் பாதிக்கப்பட்டு, மகாசமாதி நிலையில் இருந்து உயிர் விடும் வரையில், இந்து மதக்கருத்துக்களையும், தனது அனுபவத்தையும் அவரது சீடர்களோடு பகிர்ந்துகொண்டிருந்தார்.


இப்பொழுது, இந்த கட்டுரையின் முக்கியமான பகுதிக்கு வருவோம். இராமகிருஷ்
ரின் இறைதேடல் அநுபவங்களை (spiritual experiences) உற்று நோக்கினோமானால், அவரின் பிதற்றல்கள், திடீர் அழுகை, அவர் கேட்ட அசரீரிச் சத்தம், காளியுடன் உறவாடியது எல்லாமே, schizophrenia என்ற மன நோய் உள்ளவருக்கு இருக்கும் அநுபவங்களைப் போன்றதாகும். இராமகிருஷ்ரின் அசரீரி கேட்டலை auditory hallucination என்ற குறைபாட்டுடனும், காளியுடன் பேசுவதை visual hallucination என்ற schizophreniaவின் குறைபாட்டுடனும் நேரடியாக தொடர்பு படுத்திவிடலாம்.

(இடைக்குறிப்பு: நான் பாட்டிற்கு,
schizophrenia என்றால் என்னவென்று உங்களுக்கு தெரிந்திருக்கும் என்ற எண்ணத்தில் பாதிக்கட்டுரை வரை வந்துவிட்டேன். இருந்தாலும் திடீரென்று ஒரு சந்தேகம். இது பற்றி தெரியாதவர்களுக்கு இடையில் ஒரு சிறு விளக்கம். இது ஒரு மன நோய். தொடர்ந்த மன அழுத்தத்தாலும், திடீரென்று நிறுத்திவிடுகிற போதை, மதுப் பழக்கங்களாலும் வருகிறது. இதைப் பற்றி தெரிந்துகொள்ள நீங்கள் ஆளவந்தான் படத்தையும், குடைக்குள் மழை படத்தையும் இன்னொரு முறை பார்க்கலாம்.)

இதே மாதிரியாக பெரும்பாலான spiritual masterகளின் அனுபவங்களுக்கும், ஒரு schizophrenia நோயாளியின் அனுபவங்களுக்கும் அதிகம் வித்தியாசம் இல்லை என்றே சொல்லிவிடலாம். இந்த கருத்தைத் தவறென்று சொல்ல வரும் இந்த ஆன்மிகவாதிகளின் ஆதரவாளர்கள், இவ்விருவரின் அனுபவத்தில்/உணர்தலில் உள்ள அடிப்படை வித்தியாசம் என்ன என்று சொல்ல கடமைப்பட்டிருக்கிறார்கள்.


தாங்கள் மன நோயாளிகள் என்பது தெரியாமலேயே இந்த ஆன்மிகவாதிகள் இறந்து போய்விட்டார்களா என்பது மிகப்பெரிய கேள்வியாகவே எனக்கு தொக்கி நிற்கிறது.



ஓஷோவின்
என் இளமைக்கால நினைவுகள் என்ற புத்தகத்தையும் சென்ற வருடம் எனக்கு படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஓசோவை சிறு வயதில் புத்தர், தன் வயப்படுத்த அல்லது ஆக்கிரமிப்பு செய்ய விரும்புவதும், அதை ஓசோ மறுத்து தன் கலப்பற்ற இருப்பை நிறுவுவதுமான நிகழ்ச்சியை, ஓசோ அந்த புத்தகத்தில் சொல்லியிருப்பார். என்னை இது ஓசோவின் ஆரோக்கியமான மன நிலையைச் சந்தேகப்படவைத்தது. இந்த ஒன்றும் கூட மேல் குறிப்பிட்ட எ
ன் எண்ணத்தை வலுப்படுத்தியது. இதே கேள்விகள் உங்களில் சிலருக்கும் இருக்கலாம். சிலர் இதற்கு பதிலும் கண்டுபிடித்து வைத்திருப்பீர்கள். கொஞ்சம் எனக்கும் சொல்லுங்களேன்.

Tuesday, August 15, 2006

Google Search- என்றொரு உளவாளி?


கடந்து இரண்டு வருடங்களாய், நான் அதிகமாய் சென்றுவந்து இணைய தளம் Google Search தான். ஒரு நாளைக்கு, குறைந்தது 20 சொற்கள் அல்லது வார்த்தைகளைத் தேடுவது எனக்கு வழக்கமாகும். இது பெரும்பாலும், நான் விரும்பிய புத்தகங்கள், படங்கள், இசைகள், தலைவர்கள் பற்றிய ஓசி விமர்சனங்களைப் படிப்பதற்காக இருக்கும். அபூர்வமாக, அது எனது தொழில் முன்னேற்ற விசயங்களைத் தெரிந்து கொள்வதற்காகவும் இருந்து விடுவதுண்டு! இதே மாதிரி, மனதுக்கு படுகிற விசயங்களையெல்லாம், Google Searchல் தேடுகிற நோய் சில வருடங்களாய் எல்லோருக்கும் தொற்றி வருகிறது. நீங்கள் அப்படிப்பட்ட நோயுள்ளவராயிருந்தால், உங்களுக்கும், எனக்கும் சேர்த்து, இப்பொழுது ஒரு திடுக்கிடும் செய்தி.

உங்களின் விருப்பங்களை, கனவுகளை, வினோதமான ஆசைகளைப் பற்றி அறிந்த, உங்கள் அந்தரங்க கட்டிடத்தின் மூலை-முடுக்குகளைப் பற்றி துல்லியமாய் அறிந்த இன்னொரு ஐந்து இருக்கின்றதென்றால் நீங்கள் நம்புவீர்களா? ஆனால், அது தான் உண்மை. அது வேறு யாருமில்லை- Google Search தான். இப்பொழுது எனது குற்றச்சாட்டுக்கு அடிப்படையான சில செய்திகளை சொல்லயிருக்கிறேன்.

சில வாரங்களுக்கு முன்பாக, AOL என்ற தேடும் இணையம் (search-engine என்பதற்கு எவ்வளவு மோசமான மொழிபெயர்ப்புடா சாமி! என்று நீங்கள் புலம்புவது எனக்குக் கேட்கிறது) , 658, 000 பேர்களின் Search Key-words (30 million சொற் தொடுப்புகள் (queries)) தொகுப்பை பொது ஆராய்ச்சிக்காக வெளியிட்டிருந்தது. இது இந்த இணையத்தைப் பயன்படுத்தியவர்களிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. உபயோகிப்பவர்களின் பலத்த எதிர்ப்புகளுக்குப் பிறகு, இதைத் திரும்பப்பெற்றுக்கொண்டதுடன், மன்னிப்பும் கேட்டுக்கொண்டது இந்த நிறுவனம். ஆனாலும், இந்த நிகழ்ச்சி search-keywords தொகுப்பின் முக்கியத்துவத்தை உணர உதவியாய் இருந்தது.

இந்த தேடுதல்கள் மூலம் ஒருவர் தன்னைப் பற்றிய எல்லா தகவல்களையும், வெளியிட்டு விடுகிறார். உதாரணமாக அவரது பெயர் (எல்லோரும் google searchல் அவரவர் பெயரை தேடிப்பார்ப்பது ஒரு இயல்பான விசயம்), இப்பொழுதைய தொழில் (எந்த மாதிரியான தொழில் சம்பந்தமான வார்த்தைகளைத் தேடுகிறார் என்பதை வைத்து சொல்ல முடியும்), அவரது விருப்பங்கள் (இசை, திரைப்படங்கள் , கவிதைகள், புத்தகங்கள்) போன்றவற்றை போதுமான search-keywords database கொண்டு சொல்லிவிடமுடியும். மற்றபடி, அவரின் இருப்பிடம் (geographical location) கண்டுபிடிப்பது மிகமிக சுலபம். உதாரணமாக, IP (internet protocol) எண்ணை வைத்துக்கொண்டு, நீங்கள் எந்த ஊரில் இருந்து, எந்த இடத்தில் இருந்து இதைப் படித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்று சொல்லிவிடமுடியும். அதற்கும் மேலாக, நீங்கள் இயலபான மன நிலையில் உள்ளவரா என்பதைக் கூட கண்டுபிடித்துவிட முடியும். உதாரணமாக, kill, murder, torture, child-porno, suicide, போன்ற வார்த்தைகளை இணையத்தில் ஒருவர் அடிக்கடி தேடுகிறார் என்றால், நிச்சயம் அவரது சில நட்டுகள் கழன்றுவிட்டன என்று சொல்லிவிடலாம்.

இப்பொழுது ஒத்துக்கொள்கிறீர்களா? Google-search உங்களைப் பற்றி எல்லாமும் அறிந்த ஒரு உளவாளி என்று.

கொசுறு தகவல்கள் :

US நீதித் துறை (US justice department), Search-engine பயன்படுத்துபவர்களின் சொற்தொடுப்புகளை இரண்டு வருடங்களாவது அந்தந்த நிறுவனங்கள் சேமித்துவைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறது. அதோடு, US அரசு இந்த சொற்தொடுப்பு தகவல்களை, Google, Microsoft நிறுவனங்களிடமிருந்து கேட்டிருப்பதும் அதை இந்த நிறுவனங்கள் தர மறுத்திருப்பதும் முன்பு வெளியான செய்திகள்.

உங்களிடம் உள்ள ஒரே பாதுகாப்பு, நீங்கள் 65 பில்லியன் மனிதர்களில் ஒருவர் என்ற உண்மை தான். அதனால், இந்த தேடல் இணையங்கள் கையாளவேண்டிய தொகுப்பின் (database) அளவு அபரிமிதமானது. ஆனால், data-mining துறையில் நடக்கும் முன்னேற்றம் கூடிய விரைவில் இந்த database கையாளும் திறனை அதிகப்படுத்திவிடும்.


Monday, August 14, 2006

இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்.

உலகின் எல்லா இந்தியர்களுக்கும் என் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்.

இந்த நேரத்தில் இந்தியா பற்றி பெருமையாய் நினைப்பதற்கு சில அதிகப்படியான காரணங்கள் என்ற தலைப்பில் இணையத்தில் உள்ள சில செய்திகளை பரிமாறிக்கொள்ள விரும்புகின்றேன். செய்தி ஆங்கிலத்தில் இருப்பதற்கு மன்னிக்கவும்.

Extra reasons to be proud of India

  1. India is the world's largest, oldest, continuous civilization.
  2. India never invaded any country in her last 10,000 years of history.
  3. India is the world's largest democracy.
  4. Varanasi, also known as Benares, was called "The Ancient City" when Lord Buddha visited it in 500 B.C.E, and is the oldest, continuously inhabited city in the world today.
  5. India invented the Number System. Aryabhatta invented the number zero.
  6. The World's first university was established in Takshashila in 700 B.C. More than 10,500 students from all over the world studied more than 60 subjects. The University of Nalanda built in the 4th century BC was one of the greatest achievements of ancient India in the field of education.
  7. Sanskrit is the mother of all European languages. Sanskrit is the most suitable language for computer software - a report in Forbes magazine, July 1987.
  8. Ayurveda is the earliest school of medicine known to humans. Charaka, the father of medicine consolidated Ayurveda 2,500 years ago.
  9. Although modern images of India often show poverty and lack of development, India was the richest country on earth until the time of British invasion in the early 17th Century. Christopher Columbus discovered America trying to find an alternative way to get to India.
  10. The art of Navigation was born in the river Sindhu 6,000 years ago. The very word Navigation is derived from the Sanskrit word NAVGATIH. The word navy is also derived from Sanskrit 'Nou'.
  11. Bhaskaracharya calculated the time taken by the earth to orbit the sun hundreds of years before the astronomer Smart. Time taken by earth to orbit the sun: (5th century) 365.258756484 days.
  12. Budhayana, was the first to calculate the value of ?pi?. He then went on to explain the concept of what today is known as the ?Pythagorean Theorem?. He discovered this in the 6th century long before the European mathematicians.
  13. Algebra, trigonometry and calculus came from India. Sridharacharya developed quadratic equations in the 11th century. The largest numbers the Greeks and the Romans used were 106, whereas Hindus were using numbers as big as 10 to the power of 53, as early as 5,000 BCE during the Vedic period. Even today, the largest used number is Tera (10 to the power of 12).
  14. IEEE has proved what has been a century old suspicion in the scientific community, that the pioneer of wireless communication was Prof. Jagdish Bose and not Marconi.
  15. The earliest reservoir and dam for irrigation was built in Saurashtra.
  16. According to Saka King Rudradaman I of 150 BCE, a beautiful lake called Sudarshana was constructed on the hills of Raivataka during Chandragupta Maurya's time.
  17. Chess (Shataranja or AshtaPada) was invented in India.
  18. Sushruta is the father of surgery. 2,600 years ago he and health scientists of his time conducted complicated surgeries like cesareans, cataract, artificial limbs, fractures, urinary stones, plastic surgery and brain surgery. Usage of anesthesia was well known in ancient India. Over 125 surgical tools were used. Deep knowledge of anatomy, physiology, etiology, embryology, digestion, metabolism, genetics and immunity is also found in many texts.
  19. When many cultures were only nomadic forest dwellers over 5,000 years ago, Indians established the Harappan culture in the Sindhu Valley (Indus Valley Civilization).
  20. The four religions born in India, Hinduism, Buddhism, Jainism, and Sikhism, are followed by 25% of the world's population.
  21. The place value system and the decimal system were developed in India in 100 BC.
  22. India is one of the few countries in the World, which gained independence without violence.
  23. India has the second largest pool of Scientists and Engineers in the World.
  24. India is the largest English-speaking nation in the world.
  25. India is the only country other than U.S. and Japan, to have built a super computer indigenously.


தீ மிதித்து thermodynamics பாடம் நடத்திய விரிவுரையாளர்

எனது ஊரில் "பூமிதித்தல்" என்பது பிரபலம். இந்த கட்டுரையின் அடுத்த பத்தியினைப் படிக்காமல் அதென்ன பெரிய பிரமாதம்! நான் கூட செய்வேனே என்று அவசரப்பட்டு சபதம் செய்துவிடாதீர்கள்.

அந்த திருவிழாக் காலங்களில், கோவிலுக்கு முன்னே நீளமாய் ஒரு குழி திருவிழாவிற்கு சில நாட்கள் முன்னதாகவே வெட்டப்பட்டு விடும். அடுத்த நாள் விறகு கட்டைகள் குழியின் முன்னதாக குவித்துவைக்கப்படும். திருவிழா தினத்தன்று சாயங்காலம் விறகுகட்டைகளை குழியினுள் இட்டு, தீவைத்துக் கொளுத்துவார்கள். அது தக தகவென்று எறிந்து முடிந்து கனன்று கொண்டிருக்கும். அந்த நேரத்தில் இரவும் வந்திருக்கும். கடவுளுக்கு தீபார
தனை முடிந்தபின், பக்தர்கள் ஒவ்வொருவராய், சாமி வந்த நிலையில் (?) திடு திடுவென்று, தீயின் மீது ஓடி மறு பக்கத்தை அடைவார்கள். நான் சிறுவனாய் இருந்த, அந்த சமயங்களில் என்னைக் கடவுள் நம்பிக்கை கொள்ள வைத்த சம்பவங்களில் இதுவும் ஒன்று. பிற்காலங்களில், கடவுள் உண்டு, இல்லை என்று வரும் வாக்குவாதங்களுக்கு கடவுள் அல்லது சக்தியிருப்பு கொள்கையை நிறுவுவதற்கு, நான் ஏகமாய் பயன்படுத்திக்கொண்ட சம்பவம் இது. அதன் பின் ஒருமுறை, ஒரு விவரமான நாத்திக நண்பரிடம் இந்த தீமிதித்தல்் நிகழ்ச்சியை கடவுள் இருப்பு கொள்கைக்கு, ஆதாரமாய் நான் பயன் படுத்தியபோது அவர் சொன்ன விசயம் என்னை ஆச்சரியப்படுத்தியது. அதாவது, திராவிட கழக நண்பர்கள் ´கடவுள் இல்லை´ என்று சொல்லிக்கொண்டே தீமிதித்ததாக அவர் கூறிய சம்பவம் தான் அது. இருந்த போதிலும், அது மாதிரியான சம்பவத்தை நான் நேரில் பார்த்ததில்லை. ஆனால், அவர் கூறியதை முழுவதும் பொய்யென்று எடுத்துக்கொள்ள முடியவில்லை.

தீ மிதித்தல் எல்லோராலும் சாத்தியப்படக்கூடிய ஒன்றென்றால், அதற்கான விளக்கம் என்ன? சாமி வருதல் என்றால் என்ன? அந்த நிலையில் இருக்கும் மனிதனுக்கு ஏன் தீ சுடுவதில்லை? அந்த கேள்விகள் மட்டும் விடை கிடைக்காமல் என்னிடம் நிரந்தரமாய் இருந்தன? ஆனால், இந்த செய்தியை இன்று படிக்கிற போது, ஏதோ கொஞ்சம் உண்மை இருப்பது மாதிரி, இந்த நிகழ்வின் பின்னணி புரிந்த மாதிரி தெரிகிறது. அதை உங்களிடம் பகிர்ந்துகொள்ளலாம் என்பதற்கே இந்த பதிவு. அந்த செய்தி கீழே தரப்படுகிறது:

Physics professor David Willey doesn't use chalk and formulas to spark his students' interest in thermodynamics.

Instead, he walks on fire.

"Nothing gets a student's attention like the possibility that I might kill myself," said Willey, this year's winner of the President's Award for Excellence in Teaching at the University of Pittsburgh at Johnstown.

அந்த செய்தியில் தீமிதித்தல் எப்படி சாத்தியமாகிறது என்பது பற்றிய விளக்கம் கொடுக்கப்படுகிறது. தீமிதித்தல் சாத்தியமாவது அறிவுக்கு புலப்படாத சக்தியானாலோ, மத நம்பிக்கையினாலோ இல்லை. உண்மையில், மரக்கட்டைகளை உபயோகப்படுத்தி நெருப்புப் படுகைகளை உருவாக்குவதினாலேயே இது சாத்தியமாகிறது. நெருப்புக்கட்டைகளின் வெப்பம் 1000 பாரன்கீட்டுக்கு மேலே போனாலும் கூட இது சாத்தியமாவது, கட்டை ஒரு அரிதில் கடத்தி (insulator) என்பதாலேயே. இது வெப்பம் கால்களை அடைந்துவிடாமல் அடக்கி வைத்துக் கொள்கிறது. மேலும், இதன் மேலாக உள்ள எறிந்த பட்டைகளின் சாம்பல் இன்னும் வெப்பத்தை கால்களுக்கு வரவிடாமல் தடுத்து விடுகின்றன. அதோடு மிக வேகமான நெருப்பின் மீதான நடை, தீமிதித்தலை முழுவதுமாய் சாத்தியப்படுத்துகிறது.

முடிவாக வைலே(willey) கூறுவதாவது:

It's a matter of stepping up to the start line with courage and training your brain to get your foot to take the first step.

"You could keep on going forever and ever," Willey told LiveScience. "It's just a question of how much wood you want to cut."


Tuesday, August 08, 2006

கடவுள் மனிதனின் கடைசி யுத்தம்

நீ பொறுப்பற்ற சுட்டிக்குழந்தை
என்று தெரிந்தும் இந்த அழகான உலகத்தை
உன்னிடம் கொடுத்தேன்.


இரவினில் கூட
நீ பாதை தவறி விடக்கூடாதென்று
நிலவு விளக்கை
வானக்கூரையின் மூலையில்
பதித்துவைத்தேன்

இன்னொரு நிலவை
நீ உதைத்து விளையாட
உன் கைகளில் கொடுத்தேன்

நீ நிலவை உடைத்து
திசைக்கொன்றாய் எறிந்தாய்.
அவைகளை நட்சத்திரங்களாய் மாற்றி
உன் வன்முறையை ஒவ்வொரு முறையும்
நினைவுபடுத்திக்கொண்டிருந்தேன்.

விடியலின் வருடலை
நீ இழந்துவிடக்கூடாதென்று
உன் துயிலெழுப்ப சன்னலுக்கு
இராகங்களோடு பறவைகளை அனுப்பிவைத்தேன்.
நீ அவைகளின் வார்த்தைகளைப் பறித்து
ஊமைகளாய் அனுப்பிவைத்தாய்.

மௌனத்தின் குரலைச்சொல்ல
உன் வாசலுக்கு மெல்ல நடக்கும்
நதிகளை அனுப்பி வைத்தேன்.
நீ அணைகள் எழுப்பி அவைகளுக்கு கால்விலங்கிட்டாய்.

சுதந்திரத்தின் சுகத்தினை
உணர்த்த சிறகு விரித்த பறவைகளை
உன் கூரைகளுக்கு அனுப்பி வைத்தேன்.
நீ அவைகளின் சிறகுகளை முறித்து சிறையிலடைத்தாய்்.

உன் உதடுகளில் பூக்கட்டுமென்று,
ஓராயிரம் பூக்கள் பாதையெங்கும் பெய்துவைத்தேன்.
ஆனால், புன்னகை ஏந்த வேண்டிய
உன் உதடுகளில் பொறிச்சொற்கள்.
மலர்கள் ஏந்த வெண்டிய கரங்களில் ஆயுதங்கள்.

நீ எப்பொழுதாவது,
தீப்பொறிகளில் உன்னைக் கழுவி
தூய்மையாய் திரும்புவாய் என்றிருந்தேன்.
ஆனால், உப்புக்கடலில் விழுந்த ஒரு நீர்த்துளி போல்
நீ என்றென்றுமாய் தொலைந்து போனாய்.

என் சிருஷ்டி திசைக்கொன்றாய்
ஊதிய பஞ்சாய் வலியால் கதறியது.
யானை மிதித்த பூவாய்
அதன் மூச்சு திணறியது.

பூக்களின் மென்மையறியாத உனக்கு
பூந்தோட்டப் பரிசெதற்கு?

ஒழுங்காய் வைத்து
விளையாடத்தெரியாத உனக்கு உலகெதற்கு?
நான் திருப்பிக்கேட்டேன் என் உலகத்தினை.

பாதிக்கலவியில் புறம் தள்ளப்பட்டவனாய்
நீ வெகுண்டெழுந்தாய்.

உன் கோபத்தில்
திசை மாறி நடந்தன சில நதிகள்.

நீ குதித்தெழும்பியதில் வானக்கூரையின்
சில நட்சத்திரங்கள் உதிர்ந்தன.

என் முன்னூறு பரம்பரைகளையும்
நீ அசிங்கமாய் வைதாய்.
தொடையிலும் மாரிலும் தட்டி என்னைச்
சண்டைக்கழைத்தாய்.

வேறு வழியில்லாமல் கிழடு தட்டிய
என் குதிரைகளை இரதத்தில் பூட்டினேன்.
சோம்பேறிகளாய் மாறிப்போயிருந்த அவைகளுக்கு
நிலவின் கிழக்கு மூலைத்தோட்டத்தின்
காயகல்ப மரத்தின்
இலைகளைப் பறித்து உணவளித்தேன்.

அதன் கிளைகளில் ஒன்றை ஒடித்து
இரதத்தின் அச்சாணியைப் பொறுத்தினேன்.

அம்பு ஒன்றை மறந்துவிடாமல்
தோள்களில் சொருகிக்கொண்டேன்.
- சத்தியமாய் உன் முழங்காலுக்குக் கீழ்
எய்வதற்கு மட்டுமே.
என்ன இருந்தாலும் நீ என்
அன்பான குழந்தை அல்லவா?

யுத்த களத்திற்கு நீ
வெகு தாமதமாகவே வந்தாய்.
அந்நேரம், என் குதிரைகள்
குறட்டைவிட்டு தூங்கிக்கொண்டிருந்தன.

நீ மிரட்டி அடிமைப்படுத்தி வைத்திருந்த மிருகங்கள்
எதையோ கஷ்டப்பட்டு தள்ளிக்கொண்டு வந்தன.

உன்னை அத்தனை தூரத்தில் பார்ப்பது
எனக்கு சந்தோஷமாயிருந்தது.
உன்னோடு ஏதாவது பேசவேண்டும் போல
எனக்குத் தோன்றியது.

நீ உன் அடிமை விலங்குகளிடம்
எதையோ சொல்லிக்கொண்டிருந்தாய்.
அவைகள் இரும்பு உருண்டை போன்ற ஒன்றை
அந்த இயந்திரத்திற்குள் பொறுத்தின.

எனக்கு உன்னை இன்னும் அருகில்
பார்க்க வேண்டும் என்ற
ஆவல் தோன்றியது.
நான் உன்னை நோக்கி வந்துகொண்டிருந்தேன்.

நீ நேரத்தை அதற்கு மேலும்
வீண் செய்ய விரும்பாதவனாய்
இயந்திரத்தில் எதையோ வேகமாய் அழுத்தினாய்.

டொம்

அதுதான் நான் கடைசியாய்க் கேட்ட சத்தம்.
என் மீது விழுந்தது
என்னவென்று தெரியாமலேயே
நான் கருகி இறந்து போனேன்.
Free Hit Counter
Google PageRank

Your Ad Here